Thursday, March 13, 2008

எனது கிறுக்கல்கள்

வைரமுத்துவின் சமகாலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்பட்டு கொள்ளலாம். அவர் எழுத்தின் நினைவுகளோடு தூங்கிப்போக, காலையில் எழுந்தவுடன் கனவும் கவிதையாய் தோன்றியதாய் ஒரு நியாபகம். அந்த பிரமிப்பில் எழுதியது.

காற்றிலும் கீதம்
கேட்க வேண்டுமா?
கவிதை படி,
கனவும் கவிதையாய்
தோன்ற வேண்டுமா?
தமிழ் படி!!!!!!!!!!!!

குதிரையின் லகானைக் கழட்டி மற்றொரு பக்கத்தையும் பார் என்று வழிகாட்டியவர், அவருக்காக.

பெரியார் என்னும் சூறாவளி
இல்லாது இருந்திருந்தால்,
என் சிந்தினைச் செலவில்
கோட்டை கட்டி கொள்ளாமல்,
என் ஓலை குடிசையில்
இது தான் உலகம்
என்று இருந்திருப்பேன்.

அருந்ததி ராயின் "Ordinary man's guide to empire" என்ற நூலைத் தழுவி

கவனமாயிருங்கள்
உங்கள் சுதந்திரம்
அடுத்தவனால் அதிக
விலை கேட்பனுக்கு
விற்கப் படலாம்.

எப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததோ அதே போல் பெண்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது, அவர்களுக்காகவும் ஒரு சுய மரியாதை இயக்கம் வேண்டும்

பெண்களே
வெறும் கலர் கோழிகளாய்
இருக்காதீர், இல்லையேல்
என்றாவது ஒரு நாள்
நசுக்கப் படுவீர்கள்.

என் கவிதைகள் சிலருக்கு புரியாமல் போனதன் விளைவு

இது என் உலகம்,
என் உள்ள மொழிகளை
புரிந்து கொள்பவர்களுக்கு
மட்டுமே உள்ளே வர
அனுமதி உண்டு.


பேருந்தில் அவசரமாக ஒன்னுக்கு வரப்ப தோன்றியது
பயனத்தின் நீளம் விளங்க வேண்டுமா?
அவசரத்தின் எல்லையில் இருப்பவனைக் கேள்.

கவிதை வாசியுங்கள்
வாழப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்கள்
வெறும் நினைவுக் குட்டைகளே,
வாழப்படாத வாழ்க்கையை இரசிப்பதற்கேனும்
கவிதை வாசியுங்கள்.

வாழ்க்கையின் அவசரத்தில் தொலையாமல் இருக்க
என் ஆன்மாவின் சுவாசமாய் - கவிதைகள்.

இயற்கை அன்னையின் மடியில் மயங்காமல் புகைப்பட போதையில் என் நண்பர்கள் புதைந்து போனதை நினைத்து மனம் வெதும்பி எழுதியது
வருங்கால நினைவுகளுக்காக,
நிகழ்கால நிஜங்களைத்
தொலைக்காதீர்கள்.