Tuesday, August 21, 2007

ஐஐடி சென்னையில் ஒரு நள்ளிரவுப் பொழுது.

ஒவ்வொரு நாளும் பௌர்னமி ஆக இருந்திருந்தால் மனிதன் மின் விளக்கை கண்டுபிடுத்திருப்பானா என்று எனக்குள் ஒரு ஐயத்தை எற்படுத்திய அந்த நிலவொளி.அருவியின் சாரல் போன்ற மெல்லிய தூறல், சட்டை உறிஞ்சும் அளவுக்குக் கூட கணமில்லாமல். நம்மை இராஜாவாக நினைக்க வைக்கும் மரங்களின் பூக்களும் இலைகளும். சில்வண்டுகளின் சில்மிஷக் கொஞ்சல். என்னால் சுகம் தரமுடியாதா என கேக்கும் தென்றல். கைக்கெட்டும் தூரத்தில் மான்கள். இரம்யம், இந்த சொல்லுக்கு பொருள் உணர வைத்த பொழுது. தான் ஒரு கவிஞன் இல்லையே என வருத்தப்பட வைத்தது அந்த அந்தி நேரம்.

Tuesday, April 24, 2007

என்னங்க பையன் blog-க்கு ஏதோ அம்மணி பேரு வச்சிருக்கான்னு பாக்கறீங்களா. நான் என்னங்க பண்றது என்ன பேரு வைக்கலாமுனு யோசிச்சு யோசிச்சு நேரம் தான் வெட்டியா போச்சு, அதனால எனக்கு பொண்ணு பொறந்தா வக்கலாம்னு யோசிச்சு வச்சிருந்த பேர blog-க்கு வச்சுட்டன். பேரு நல்லா இருக்கா?