ஐஐடியில் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிமுகமான தொலைக்காட்சித் தொடர் தான் "Mind your Language". இங்கிலாந்தில் வாழும் சில வெளிநாட்டவர்கள் ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது அவர்கள் அடிக்கும் கூத்து தான் தொடரே. முதல் தொகுப்பில் மொத்தம் 29 பாகங்கள், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வெளிவந்தது. youtubeல் முழுத் தொடரும் கிடைக்கிறது, முடிந்தால் பாருங்கள். நாலைந்து முறை பார்த்து விட்டேன், இன்னும் அலுக்கவில்லை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். இதைத் தழுவி இந்தியில் வெளிவந்த தொடர் "Zabaan Sambhal Ke". இத்தொடரின் சில பாகங்களும் youtubeல் இருக்கிறது.
இதைத் தமிழில் எடுப்பதென்றால், ஈழம் அமைந்து அது நன்றாக முன்னேறிய பின்பு தான் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இதை இப்பொழுது விசய் டிவி "Kollywood Iskool" என்று தமிழில் வழங்குகின்றனர். தமிழ் கற்றுக்கொள்வதற்காக தமிழ் திரையுலகப் பிரபலங்கள் வரும் பள்ளி தான் கதை நடக்கும் இடம். லொள்ளு சபாவில் வரும் தலைகள் பலவற்றை இங்கு காண முடிகிறது. கதைக்கரு மட்டும் இல்லாது, பல நகைச்சுவைகளையும் சுட்டு உள்ளார்கள். என்ன இருந்தாலும், அசலுக்கு அருகில் கூட வரவில்லை.
சாந்தகுமார் பக்கங்கள்
Saturday, January 17, 2009
Thursday, March 13, 2008
எனது கிறுக்கல்கள்
வைரமுத்துவின் சமகாலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்பட்டு கொள்ளலாம். அவர் எழுத்தின் நினைவுகளோடு தூங்கிப்போக, காலையில் எழுந்தவுடன் கனவும் கவிதையாய் தோன்றியதாய் ஒரு நியாபகம். அந்த பிரமிப்பில் எழுதியது.
காற்றிலும் கீதம்
கேட்க வேண்டுமா?
கவிதை படி,
கனவும் கவிதையாய்
தோன்ற வேண்டுமா?
தமிழ் படி!!!!!!!!!!!!
குதிரையின் லகானைக் கழட்டி மற்றொரு பக்கத்தையும் பார் என்று வழிகாட்டியவர், அவருக்காக.
பெரியார் என்னும் சூறாவளி
இல்லாது இருந்திருந்தால்,
என் சிந்தினைச் செலவில்
கோட்டை கட்டி கொள்ளாமல்,
என் ஓலை குடிசையில்
இது தான் உலகம்
என்று இருந்திருப்பேன்.
அருந்ததி ராயின் "Ordinary man's guide to empire" என்ற நூலைத் தழுவி
கவனமாயிருங்கள்
உங்கள் சுதந்திரம்
அடுத்தவனால் அதிக
விலை கேட்பனுக்கு
விற்கப் படலாம்.
எப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததோ அதே போல் பெண்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது, அவர்களுக்காகவும் ஒரு சுய மரியாதை இயக்கம் வேண்டும்
பெண்களே
வெறும் கலர் கோழிகளாய்
இருக்காதீர், இல்லையேல்
என்றாவது ஒரு நாள்
நசுக்கப் படுவீர்கள்.
என் கவிதைகள் சிலருக்கு புரியாமல் போனதன் விளைவு
இது என் உலகம்,
என் உள்ள மொழிகளை
புரிந்து கொள்பவர்களுக்கு
மட்டுமே உள்ளே வர
அனுமதி உண்டு.
பேருந்தில் அவசரமாக ஒன்னுக்கு வரப்ப தோன்றியது
பயனத்தின் நீளம் விளங்க வேண்டுமா?
அவசரத்தின் எல்லையில் இருப்பவனைக் கேள்.
கவிதை வாசியுங்கள்
வாழப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்கள்
வெறும் நினைவுக் குட்டைகளே,
வாழப்படாத வாழ்க்கையை இரசிப்பதற்கேனும்
கவிதை வாசியுங்கள்.
வாழ்க்கையின் அவசரத்தில் தொலையாமல் இருக்க
என் ஆன்மாவின் சுவாசமாய் - கவிதைகள்.
இயற்கை அன்னையின் மடியில் மயங்காமல் புகைப்பட போதையில் என் நண்பர்கள் புதைந்து போனதை நினைத்து மனம் வெதும்பி எழுதியது
வருங்கால நினைவுகளுக்காக,
நிகழ்கால நிஜங்களைத்
தொலைக்காதீர்கள்.
காற்றிலும் கீதம்
கேட்க வேண்டுமா?
கவிதை படி,
கனவும் கவிதையாய்
தோன்ற வேண்டுமா?
தமிழ் படி!!!!!!!!!!!!
குதிரையின் லகானைக் கழட்டி மற்றொரு பக்கத்தையும் பார் என்று வழிகாட்டியவர், அவருக்காக.
பெரியார் என்னும் சூறாவளி
இல்லாது இருந்திருந்தால்,
என் சிந்தினைச் செலவில்
கோட்டை கட்டி கொள்ளாமல்,
என் ஓலை குடிசையில்
இது தான் உலகம்
என்று இருந்திருப்பேன்.
அருந்ததி ராயின் "Ordinary man's guide to empire" என்ற நூலைத் தழுவி
கவனமாயிருங்கள்
உங்கள் சுதந்திரம்
அடுத்தவனால் அதிக
விலை கேட்பனுக்கு
விற்கப் படலாம்.
எப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததோ அதே போல் பெண்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது, அவர்களுக்காகவும் ஒரு சுய மரியாதை இயக்கம் வேண்டும்
பெண்களே
வெறும் கலர் கோழிகளாய்
இருக்காதீர், இல்லையேல்
என்றாவது ஒரு நாள்
நசுக்கப் படுவீர்கள்.
என் கவிதைகள் சிலருக்கு புரியாமல் போனதன் விளைவு
இது என் உலகம்,
என் உள்ள மொழிகளை
புரிந்து கொள்பவர்களுக்கு
மட்டுமே உள்ளே வர
அனுமதி உண்டு.
பேருந்தில் அவசரமாக ஒன்னுக்கு வரப்ப தோன்றியது
பயனத்தின் நீளம் விளங்க வேண்டுமா?
அவசரத்தின் எல்லையில் இருப்பவனைக் கேள்.
கவிதை வாசியுங்கள்
வாழப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்கள்
வெறும் நினைவுக் குட்டைகளே,
வாழப்படாத வாழ்க்கையை இரசிப்பதற்கேனும்
கவிதை வாசியுங்கள்.
வாழ்க்கையின் அவசரத்தில் தொலையாமல் இருக்க
என் ஆன்மாவின் சுவாசமாய் - கவிதைகள்.
இயற்கை அன்னையின் மடியில் மயங்காமல் புகைப்பட போதையில் என் நண்பர்கள் புதைந்து போனதை நினைத்து மனம் வெதும்பி எழுதியது
வருங்கால நினைவுகளுக்காக,
நிகழ்கால நிஜங்களைத்
தொலைக்காதீர்கள்.
Tuesday, August 21, 2007
ஐஐடி சென்னையில் ஒரு நள்ளிரவுப் பொழுது.
ஒவ்வொரு நாளும் பௌர்னமி ஆக இருந்திருந்தால் மனிதன் மின் விளக்கை கண்டுபிடுத்திருப்பானா என்று எனக்குள் ஒரு ஐயத்தை எற்படுத்திய அந்த நிலவொளி.அருவியின் சாரல் போன்ற மெல்லிய தூறல், சட்டை உறிஞ்சும் அளவுக்குக் கூட கணமில்லாமல். நம்மை இராஜாவாக நினைக்க வைக்கும் மரங்களின் பூக்களும் இலைகளும். சில்வண்டுகளின் சில்மிஷக் கொஞ்சல். என்னால் சுகம் தரமுடியாதா என கேக்கும் தென்றல். கைக்கெட்டும் தூரத்தில் மான்கள். இரம்யம், இந்த சொல்லுக்கு பொருள் உணர வைத்த பொழுது. தான் ஒரு கவிஞன் இல்லையே என வருத்தப்பட வைத்தது அந்த அந்தி நேரம்.
Subscribe to:
Posts (Atom)