ஒவ்வொரு நாளும் பௌர்னமி ஆக இருந்திருந்தால் மனிதன் மின் விளக்கை கண்டுபிடுத்திருப்பானா என்று எனக்குள் ஒரு ஐயத்தை எற்படுத்திய அந்த நிலவொளி.அருவியின் சாரல் போன்ற மெல்லிய தூறல், சட்டை உறிஞ்சும் அளவுக்குக் கூட கணமில்லாமல். நம்மை இராஜாவாக நினைக்க வைக்கும் மரங்களின் பூக்களும் இலைகளும். சில்வண்டுகளின் சில்மிஷக் கொஞ்சல். என்னால் சுகம் தரமுடியாதா என கேக்கும் தென்றல். கைக்கெட்டும் தூரத்தில் மான்கள். இரம்யம், இந்த சொல்லுக்கு பொருள் உணர வைத்த பொழுது. தான் ஒரு கவிஞன் இல்லையே என வருத்தப்பட வைத்தது அந்த அந்தி நேரம்.
Tuesday, August 21, 2007
Subscribe to:
Posts (Atom)